சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்
ADDED :2731 days ago
பம்பை : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 539 பேர் பெண்கள் ஆவர். 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 539 பெண்கள், கேரள போலீசார் உருவாக்கிய வலைதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். கார்த்திகை மாத சீசனுக்காக நவம்பர் 17 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் முன்பதிவு செய்யாமலும் ஏராளமான பெண்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.