உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு கட்டப் போறீங்களா....

வீடு கட்டப் போறீங்களா....

குடியிருக்க வீடு அவசியம். ஆனால், அதைக் கட்டுவதற்குள், ஆயிரம் பிரச்னைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. தடைகளையெல்லாம் தாண்டி, வீடு கட்டி முடிக்க சம்பந்தர் பாடிய இந்தப் பதிகம் உங்களுக்கு வழிகாட்டும். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை மனதில் நினைத்து இதைப் பாடுங்கள். மளமளவென பணி முடியும். நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளேறுஒன்றுடையானை உமை ஒருபாகம் உடையானைசென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.கைம்மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக்கழை பாய்வான்செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளிவெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா நீபைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே.மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிசந்தம் மலர்கள் சடைமேல் உடையார் விடைஊரும்எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.துறைமல்கு சாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்கறைமல்கு கண்டன் கனல்எரி ஆடும் கடவுள்ளம்பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்சிலைவரையாகச் செற்றன ரேனும் சிராப்பள்ளித் தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே.வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போதுசெய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே.வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்சேயுயர் கோயில் சிராப்பள்ளி மேவிய செல்வனார்பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்தீயுகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே.மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன்தன்தலைகலனாகப் பலிதீர்ந்து உண்பர் பழி ஓரார்சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்சிலஅல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த சிராப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே.நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலைஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே.தேன்நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்தகானல் சங்கேறும் கழுமல ஊரில் கவுணியன்ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்வான சம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !