உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சோமவார சங்காபிஷேக பூஜை
ADDED :2604 days ago
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மூன்றாவது சோமவார சங்காபிஷேக பூஜை நடந்தது.உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, மூன்றாவது சோமவார சங்காபிஷேகம் நேற்று (டிசம்., 3ல்) நடந்தது.
விநாயகர் வழிபாடு, கலச பூஜை, மற்றும் ஹோமம் இடம்பெற்றன. சங்காபிஷேகத்தையொட்டி, 108 வலம்புரி சங்கு தீர்த்தங்கள், திரிசூலமாக வடிவமைக்கப்பட்டு பூஜை நடந்தது. விஸ்வநாத சுவாமிகளுக்கு, 16 வகையான திரவியங்கள் மற்றும் 108 வலம்புரி சங்கு தீர்த்தங்களிலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.விசாலாட்சி அம்மன் மற்றும் விஸ்வநாத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.