சபரி சன்னிதானமும் திருவிதாங்கூர் சமஸ்தானமும்!
ADDED :2645 days ago
திப்பு சுல்தான் காலத்தில் கேரளப்பகுதிகளை திப்புவின் படைகள் ஆக்கிரமித்தது. அப்போது, போர் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்த சொத்துகளையும் திருவிதாங்கூர் அரசிடம் அடகுவைத்தது. அவற்றை மீட்க முடியாததால், சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட மொத்த சொத்துக்களும் திருவிதாங்கூர் அரசின் வசமாயின. இப்படிதான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் வசமானது. ஐயப்பனின் திருவாபரணங்களை மட்டும் பந்தள அரசர் வசமே அளித்து, சம்பிரதாயங்கள் தொடரும்படி திருவிதாங்கூர் அரசு கேட்டுக்கொண்டது.