உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அருள்பாலிப்பு

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அருள்பாலிப்பு

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி, திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதியை 16 முறை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் 16 கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு பவுர்ணமி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !