பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.45 லட்சம் காணிக்கை
ADDED :2474 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில், 45.31 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில், மாதம் ஒருமுறை, உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் முன், 20 உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டன. வங்கி ஊழியர், கோவில் பணியாளர், சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவ மாணவியர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.பணமாக, 45 லட்சத்து, 31 ஆயிரம் ரூபாய், 299 கிராம் தங்கம், 8,840 கிராம் வெள்ளி இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.