திருவண்ணாமலையில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்
ADDED :2480 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மன் மேளதாளம் முழங்க, தங்கக்கொடி மரம் முன் எழுந்தருளினர்.அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னிதி முன், 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் விழா நடக்கும். தினமும் காலை, இரவு, சுவாமி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.