உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்சவம்

திருக்கோவிலூர் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்சவம்

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்ஸவத்தின் நிறைவாக புஷ்பவள்ளி தாயார் சமேத தேகளீசபெருமாள் கண்ணாடி அறையில் அருள்பாலித்தனர்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உத்ஸ வத்தின் நிறைவு விழா நேற்று முன்தினம் (ஜன., 14ல்)நடந்தது.

காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.சுவாமி ஒரே கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பத்தி உலா நடந்தது. 7:00 ஊஞ்சல் சேவை. 7:30 மணிக்கு கண்ணாடி அறையில் திவ்யபிரபந்த துவக்கம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு பெருமாள் தாயார் கண்ணாடி அறையில் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

காலை 8:00 மணிக்கு தாயார்  பெருமாள் ஒரே கேடயத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர்.ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !