மேல்மலையனுார் அங்காளம்மன் உண்டியல் காணிக்கை
ADDED :2438 days ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 43 லட்சத்து 39 ஆயிரத்து 916 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி முன்னிலையில் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இதில், 43 லட்சத்து 39 ஆயிரத்து 916 ரூபாயும், 182 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் 550 கிராம் இருந்தன.அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், மணி, சரவணன், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.