உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமத்தி வேலூர் அருகே, ராஜாசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

பரமத்தி வேலூர் அருகே, ராஜாசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

ப.வேலூர்: பரமத்தி வேலூர் அருகே, நன்செய் இடையாறில் உள்ள ராஜாசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று( பிப்., 10ல்)  நடந்தது.

நேற்று ( பிப்., 10ல்)  காலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை நடந்தது. 9:00 மணிக்கு மூலஸ்தான மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, அலங்காரம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பழனிவேலன், அறங்காவலர்கள் மாரப்பன், மோகன், தங்கவேல் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !