உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கரநாராயணனர் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சிறப்பு அர்ச்சனை

தும்பைப்பட்டி சங்கரநாராயணனர் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சிறப்பு அர்ச்சனை

தும்பைப்பட்டி:  சிவாலயபுரம்   அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணனர் கோவிலில் நேற்று (பிப்., 17ல்) மாசி  மாத வளர்பிறை  பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.   

முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம்,  அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,  கரும்பு சாறு,  சந்தனப்பொடி, திருநீர்,  மற்றும் ஸ்வர்ணம் அபிக்ஷேகம் நடைபெற்றது.  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், புல்வாமா மாவடடத்தில் நடந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.   ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணனர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !