உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் தேர் ஊர்வலம்

விநாயகர் கோவில் தேர் ஊர்வலம்

கூடலுார்: கூடலுார் ஆமை குளம் சக்தி விநாயகர் கோவில் தேர் ஊர்வலம் நடந்தது.கூடலுார், ஆமை குளம் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் திருவிழா, கடந்த, 15ல் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. 16ல் குடோன் பகுதியிலிருந்து, பறவை காவடி ஊர்வலம் நடந்தது. அதில், பக்தர்கள் பறவை காவடி மற்றும் வேல் பூட்டியும், பால் குடம் எடுத்து பங்கேற்றனர். தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இரவு சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு தேர் ஊர்வலம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். ஊர்வலம் பாண்டியார் டான்டீ மற்றும் கோழிகோடு சாலை மரப்பாலம் முதல் குடோன், வழியாக கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !