உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரையில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரையில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

 மயிலம் : திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது.கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திர மவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இரவு 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி காண்பித்தனர்.பவுர்ணமி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடு களை கோவில் உதவி ஆணையாளர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !