திருப்பூர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி முதலாவது ஆராதனை விழா
ADDED :2430 days ago
திருப்பூர்:ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முதலாவது ஆராதனை விழா நடந்தது.ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடம், திருப்பூர் கிளை சார்பில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (புது பெரியவா) சுவாமிகளின் முதலாவது வார்ஷிக ஆராதனை விழா, திருப்பூர் ஓடக்காடு, காவேரி வீதியில் உள்ள ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று (மார்ச்., 17ல்) மாலை நடந்தது. முதலில் பாராயணங்கள் நடந்தது. பின், நாமசங்கீர்த்தனம்நடந்தது. இதில், மோஹனூர் ஸ்ரீ காந்த் கவுண்டன்யய பாகவதர் மற்றும் கோவிந்தபுரம் ஞானேஷ்வர் பாகவதர் குழுவினர் பங்கேற்றனர்.