குளித்தலை பங்குனி உத்திர திருவிழா பால் குட ஊர்வலம்
ADDED :2420 days ago
குளித்தலை: மருதூரில், பங்குனி உத்திர திருவிழா பால் குடவிழா மற்றும் வினாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.
குளித்தலை அடுத்த மருதூரில், பட்டி வினாயகர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று (மார்ச்., 21ல்) காலை, கிராம பொது மக்கள் சார்பில் மருதூர் காவிரி ஆற்றில் பால் குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். மருதூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பட்டி வினாயகர் கோவில் வந்தடைந்தனர். தொடந்து மாலை, பட்டி வினாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.