மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ADDED :2404 days ago
அவலூர்பேட்டை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா முடிந்த நிலையில் நேற்று (மார்ச்., 22ல்), இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
உண்டியலில், 76 லட்சத்து 8 ஆயிரத்து 667 ரூபாயும், தங்கம் 520 கிராம் மற்றும் வெள்ளி 1,250 கிராம் இருந்தன.அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், மணி, சரவணன், சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் உடனிருந்தனர்.