நெல்லிக்குப்பம் காலபைரவர் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :2387 days ago
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகம், பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங் காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவர் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.