உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

தும்பைப்பட்டி: தும்பைப்பட்டி,  சிவாலயபுரம்   சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் 2.2.19  பங்குனி  மாத தேய்பிறை   பிரதோஷ வழிபாடு மற்றும் மழை பெய்ய வேண்டியும் சிறப்பு  அர்ச்சனை நடைபெற்றது.  


முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம்,  அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,  கரும்பு சாறு,  சந்தனப்பொடி, திருநீர்,  மற்றும் ஸ்வர்ணம் அபிக்ஷேகம் நடைபெற்றது.   பக்தர்கள் சிவபுராணம், கோளருபதிகம், நந்தி தேவரின் கவசம், சிவன் பதிகங்கள் பாராயணம் செய்தனர்.  விவசாயம் செழித்தோங்கவும், நாட்டில் அமைதி தழைத் தோங்கவும்  மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர்,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !