வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2480 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேல்மலையனுார் தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 6.௦௦ மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, 7.௦௦ மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 10.௦௦ மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்தனர்.