ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2410 days ago
ராமேஸ்வரம் : சித்ராபவுணர்மியை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரை பவுணர்மியான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் முதலில் புரோகிதர்கள் மூலம் முன்னோர் ஆன்மா சாந்தியடை வேண்டி திதி பூஜை செய்து, கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் நின்று நீராடினார்கள். சித்தரை பவுணர்மியை யொட்டி நேற்று கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் கோயில் சன்னதி தெரு, நான்கு ரதவீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.