உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி அர்ச்சுனன் தபசு மரம் ஏறி தவம் செய்யும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அர்ச்சுனன் தபசு மரம் ஏறி தவம் செய்யும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: மஹாபாரத விழாவையொட்டி, அர்ச்சுணன் தபசுமரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி பஞ்., முருக்கம் பள்ளம் கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவில், 45ம் ஆண்டு, மஹாபாரத விழா கடந்த, 15ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

அன்று முதல் தொடர்ந்து, 18 நாட்களுக்கு மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை, ஆண்டி பாகவதரின் சொற்பொழிவு நடந்து வருகிறது. கடந்த, 19 முதல், தொடர்ந்து, 13 நாட்களுக்கு இரவு, 9:00 மணி முதல் சுப்ரமணிய சிவா நாடக கலை குழுவினரின் சார்பில், மஹாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நடந்து வருகிறது. நேற்று (ஏப்., 28ல்) காலை, அர்ச்சுனன் தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், அர்ச்சுனன் தனது எதிரிகளை கொல்ல, பகலி என்று சொல்லக்கூடிய, வில் வற்றாக, அம்பை சிவனிடத்தில் வாங்குவதற்காக, 90 அடி தபசு மரத்தில், இடது காலால் ஊன்றி, வலது காலை தூக்கி, கண்களை மூடி, கைகளைக் கூப்பி, வேண்டிக்கொண்டு மேலே ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது. இதைக்காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !