உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயில் உண்டியலில் 31 நாட்களில் ரூ. 2.19 கோடி

பழநிகோயில் உண்டியலில் 31 நாட்களில் ரூ. 2.19 கோடி

பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில் 31 நாட்களில் ரூ. 2 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 31 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணும்பணி நடந்தது. அதில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 19 லட்சத்து 78ஆயிரத்து 605, தங்கம்- 1,180 கிராம், வெள்ளி- 16 ஆயிரத்து 940கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 343 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ)செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், முதுநிலைக் கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமாஉட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !