காமாட்சியம்மன் கோயிலில் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
ADDED :2345 days ago
வால்பாறை: காமாட்சியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபட்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது.விழாவையொட்டி நேற்று பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர்.