அள்ளினாலும் குறையாது
ADDED :2395 days ago
துரியோதனனின் சூழ்ச்சியினால், பாண்டவர்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்போது, உணவுக்கு கஷ்டப்படாமல் இருக்க, தவுமிய மகரிஷி ஆலோசனையின் படி தர்மர் ஆதித்ய மந்திரம் ஜெபித்தார். அதன் பயனாக ஒரு அட்சயதிரிதியை நாளில் சூரியதேவன் காட்சியளித்து அட்சய பாத்திரம் அளித்தார். அதன் மூலம் தேவையான நேரத்தில் அள்ள அள்ளக் குறையாமல் உணவு பெற்றனர். இதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.