இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை
ADDED :2445 days ago
மதுரை: மதுரையில் திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு 63 நாயன்மார்களின் வீதியுலா நடந்தது.
மதுரை இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு, மாலை 6.00 மணிக்கு 63 நாயன்மார்களின் வீதியுலா நடந்தது. திருமுறை ஆசிரியர் சுரேஷ்சிவன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.