உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

மங்கலம்பேட்டை பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

மங்கலம்பேட்டை : காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா, நேற்று முன்தினம் (மே., 20ல்) தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவடைந்தது.மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா, கடந்த 11ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.கடந்த 17ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஆதிகேசவ பெருமாள், வேதவள்ளி நாச்சியார் திருக் கல்யாண உற்சவம், 19ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர்த் திருவிழா நடந்தது.நேற்று முன்தினம் (20ம் தேதி) இரவு 8:00 மணிக்கு நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !