உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்

குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்

மேட்டுப்பாளையம்: துதிக்கை ஆழ்வாராக பக்தர்களால் போற்றப்படும் விநாயகர், வை காசிமாத திருவோண நட்­சத்திரமான நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகே  உள்ள கோவிலில் சக்தி விநாயகராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், முழு முதற்கடவுளான விநாயகர் இந்து சமயமான சைவத்தில் கணபதியாகவும், வைணவத்தில் துதிக்கையாழ்வாராகவும் போற்றப்படுகிறார். திருவோணநட்­சத்திரமான நேற்று, சக்தி விநாயகருக்கு சகலவித திரவிய அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு, சந்தனம், குங்குமம், மஞ்­சள் ஆகியவற்றிலும் மலர் மாலைகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !