காலபைரவர் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு
ADDED :2322 days ago
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் காலபைரவர் கோவிலில், நான்காம் ஆண்டு விழா மற்றும் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கிணத்துக்கடவு அடுத்துள்ள குருநல்லிபாளையம் கிராமத்தில், வைரீஸ்வரர் காலபைரவர் கோவிலில், நான்காம் ஆண்டு விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி பூஜையும் நேற்று முன் தினம் நடந்தது.ஆண்டு விழாவில், மதியம், 3:00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையில், காலபைரவருக்கு பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம் அபிேஷகம் நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, காலபைரவருக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில், குருநல்லிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.