உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடி கோயிலில் நிகும்பலா யாகம்

அய்யாவாடி கோயிலில் நிகும்பலா யாகம்

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திசையிலும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலில் ரா வணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.

இக்கோயிலில் அம்மாவாசை தோறும், மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரனடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது வைகாசி மாத அம்மாவாசையான நேற்று காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங் கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !