வடமதுரை மாணிக்கவிநாயகர் கும்பாபிஷேகம்
ADDED :2348 days ago
வடமதுரை:தென்னம்பட்டி ஊராட்சி கே.குரும்பபட்டியில் மாணிக்கவிநாயகர், ஸ்ரீபட்டவன், ஸ்ரீபாப்பாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் (ஜூன்., 5ல்) மாலை கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று (ஜூன்., 6ல்)காலை இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கி நிறைவுற்றதும், கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வரதராஜபெருமாள் கோயில் அர்ச்சகர் பூபதி, செந்துறை திருவேங்கடம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.