முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :2380 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கடந்த 5ம் தேதி துவங்கிய விழாவையொட்டி, தினமும் அம்மன் வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் கழு மரம் ஏறுதல் நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், 9:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள், அலகு குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலை 3:00 மணிக்கு, திருத்தேர் விழா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.