சங்கடஹர சதுர்த்தி: கோவில்களில் பூஜை
ADDED :2445 days ago
வீரபாண்டி: சங்கடஹர சதுர்த்தியான நேற்று, சேலம், அரியானூர் பிரிவில் உள்ள, மகா கணபதி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டது. மாலையில் நடந்த சதுர்த்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஆட்டையாம்பட்டி, கைலாசம்பாளையம் புதூரில் உள்ள ராஜகணபதி கோவிலில், மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சேலம், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில், விநாயகருக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.