செஞ்சி வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சம் உற்ஸவம்
ADDED :2312 days ago
செஞ்சி:வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலையில் விநாயகர், பெரியாயி மற்றும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.இரவு 7:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. 8:00 மணிக்கு அன்னதானமும்; 10:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.நிகழ்ச்சியில் அறங்காவலர் புண்ணியமூர்த்தி, விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.