உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 14ம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.

ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 6ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடக்கிறது.நேற்று முன் தினம் 9ம் தேதி காலை 7:00 மணியளவில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேக மும், இரவு நாக வாகனத்தில் உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலாவும் நடந்தது.

வரும் 14ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் திருத்தேர் திருவிழா நடக்கிறது.ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடை பெறும் இந்த தேர்திருவிழாவில் திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பர்.பொதுமக்களின் வசதிக்கேற்ப அரசு சார்பில்கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !