திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வேண்டி நூதன வழிபாடு
ADDED :2379 days ago
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் கடும் வறட்சியால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அக்கிராம மக்கள் நேற்று (ஜூலை., 10ல்) அப்பகுதி ஏரியில் உள்ள, பொன்னி அம்மனு க்கு வழிபாடு நடத்தி, பெண்கள் ஒப்பாரி வைத்து, நூதன வழிபாடு நடத்தினர்.