பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
ADDED :2434 days ago
பழநி : ஆடி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், நேற்று (ஜூலை., 17ல்) மாலை அபிஷேகம், அலங்காரம் செய்து, நுாறாயிரம் மலர்கள் துாவி அர்ச்சனை நடந்தது. ஆக.,10 வரை தினமும் லட்சார்ச்சனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஆக.,11ல் ஆடிலட்சார் ச்சனை யாக பூஜையும், ஆக., 16ல் கடைசி ஆடிவெள்ளி அன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது.