உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் அலங்கார சப்பரத்தில் புனித தோமையார் பவனி

அவிநாசியில் அலங்கார சப்பரத்தில் புனித தோமையார் பவனி

அவிநாசி:அவிநாசியில் உள்ள புனித தோமையார் தேவாலயத் திருவிழா, நேற்று  (ஜூலை., 29ல்)கோலாகலமாக நடந்தது.அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித தோமையார் தேவாலய திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த, 24,25,26 ஆகிய தேதிகளில், மாலை, சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை  நடந்தது .திருவிழா நாளான நேற்று (ஜூலை., 29ல்), காலை, 8:30 மணிக்கு மறை வட்ட முதன்மை குரு ஆரோக்கியராஜ் ஸ்டீபன் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.  

இதில், அருட்தந்தையர்கள் ஜான் ஜோசப், ஹென்றி டேனியல் உட்பட பலர்  பங்கேற்றனர். திருப்பலி முடிவில், தேவாலயத்தை சுற்றி, தோமையார் சப்பரம்  பவனியாக எடுத்து செல்லப் பட்டது.மாலை, 5:30 மணிக்கு, திருவிழா சிறப்பு  கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. அருட் தந்தை கனகராஜ் தலைமையில் நடந்த  திருப்பலியில், 15க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் பங்கேற்றனர். மாலை, 6:30  மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், புனித தோமையார் பவனி வந்தார்.  பவனியில் பங்கேற்ற பக்தர்கள், ஜெபமாலை செய்த படியும், பாடல் பாடிய படியும்  பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தேவாலய பங்குகுரு கென்னடி மற்றும் பங்கு  மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !