உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

பாதூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையொட்டி நடந்த நிகும்பலா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக குண்டத்தில் பழ வகைகள், நெய், பால் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குழுக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் யாக குண்டத்தில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற ஒரு எழுதிய வெற்றிலையும், புடவைகளும் சாற்றப்பட்டன. ஆடி அமாவாசையையொட்டி பிரத்தியங்கிராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆடி அமாவாசை என்பதால் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாக குண்டத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். யாக குண்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !