முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :2586 days ago
நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.பண்டசோழநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிதிருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை பூங்கரகம் வீதியுலா, மதியம் சாகை வார்த்தல், மாலை ஊரணி பொங்கல், இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.நேற்று முன்தினம் செடல் உற்சவம் நடந்தது. வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடல் போட்டும், கார், பஸ், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை அலகு போட்டு இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.