உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ­காசி சிவன் கோயி­லில் சட்டத் தேரோட்டம்

சிவ­காசி சிவன் கோயி­லில் சட்டத் தேரோட்டம்

சிவ­காசி: சிவ­காசி சிவன் கோயி­லில் வரு­டந்­தொ­றும் ஆடித்­த­பசு விழா  கொண்­டா­டப்­ப­டு­வது வழக்­கம்.

இந்த வரு­டம் ஆக. 3 ல்  கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கிய திரு­விழா தொடர்ந்து 15 நாட்­கள்  நடை­பெ­று­கிறது. கொடி­யேற்ற நிகழ்ச்சி முடிந்­த­வு­டன் , சுவா­மி­க­ளுக்கு சிறப்பு அலங்­கா­ரம் செய்­யப்­பட்டு பூஜை நடந்­தது.விழா நாட்­களில் தின­மும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, ரிஷப வாக­னம், சிம்ம வாக­னம், யானை வாக­னம், கிளி வாக­னம் , அன்ன வாக­னம் உள்­ளிட்ட வாக­னங்­களில் வீதி உலா வந்து அருள் பாலித்­தார். இந்­நி­லை­யில் நேற்று சுவா­மிக்கு சிறப்பு அலங்­கா­ரம் செய்­யப்­பட்டு பூஜை நடந்­தது. பின்­னர் சட்­டத் தேரோட்­டம் நடந்­தது. ஏரா­ள­மான பக்­தர்­கள் வடம் பிடித்து தேர் இழுத்­த­னர்.  தொடர்ந்து ஆக. 13 ல் தபசு விழா நடை­பெ­றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !