திருப்பரங்குன்றத்தில் 1008 விளக்கு பூஜை
ADDED :2237 days ago
திருப்பரங்குன்றம் : உலக நன்மை, பெண்களுக்கு வரன் அமைய, உயிரினங்கள் சுபிட்சம் பெற, மழை வேண்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை நடந்தது. திருவாட்சி மண்டபத்தில் மூன்றரை அடி உயர வெள்ளி விளக்கும், கம்பத்தடி, மடப்பள்ளி, ஆஸ்தான மண்டபம், உற்ஸவர் சன்னதியில் மூன்றரை அடி உயர பித்தளை விளக்குகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. சிவாச்சாரியார்கள் கோயில் விளக்குகளில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். இதைதொடர்ந்து பெண் பக்தர்கள் தீப வழிபாடு நடத்தினர்.