உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி அருகே, ஆதி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்

பொன்னேரி அருகே, ஆதி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்

உடுமலை:பொன்னேரி அருகே, ஐயம்பாளையம்புதுார் ஆதி விநாயகர்  கோவிலில், இன்று 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.உடுமலை, பொன்னேரி ஊராட்சி ஐயம்பாளையம்புதுாரில் ஆதிவிநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேக விழா, நேற்று 18ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாட்டு பூஜைகள் நடந்தது. நேற்று 18ம் தேதி இரவு, 7:45 மணிக்கு, முதற்கால யாகமும், இரவு 8:00 மணிக்கு, விமான கலசம் நிறுவுதல், எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்வுகள் நடந்தன.  இரவு, 8:45 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை  விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் இன்று 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி  நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு வேள்வி நிறைவு பெற்று, 9:00 மணிக்கு  திருக்குடங்கள் புறப்பாடும், காலை, 9:45 மணிக்கு கும்பாபிஷேக விழாவும்  நடைபெறுகிறது. தொடர்ந்து காலை, 11:00 சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !