உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தாடிக்கொம்பு : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு  தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு, காலை, மாலையில் ஆறுகால பூஜைகள், பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், தேன், பழச்சாறு உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது.  பின்னர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கப்ட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !