உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் அம்மன் புடவைகளுக்கு கிராக்கி

மடப்புரம் அம்மன் புடவைகளுக்கு கிராக்கி

திருப்­பு­வ­னம்: மடப்­பு­ரத்­தில் வாரந்­தோ­றும் வெள்­ளிக்­கி­ழமை அம்­ம­னுக்கு அணி­விக்­கப்­படும் புட­வை­களை வாங்க பெண் பக்­தர்­கள் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். பிர­சித்தி பெற்ற காளி கோயில்­களில் ஒன்­றான மடப்­பு­ரம் பத்­ர­கா­ளி­யம்­மன் கோயி­லுக்கு பெண் பக்­தர்­கள் அதி­க­ள­வில் வரு­வது வழக்­கம்.குழந்தை பேறு, திரு­மண தடை, குடும்­பத்­தில் நிம்­மதி உள்­ளிட்ட பல்­வேறு நேர்த்­திக்­க­டன் வேண்டி வரும் பக்­தர்­கள் மடப்­பு­ரம் காளிக்கு பட்டு சேலை சார்த்­து­வது வழக்­கம். தின­சரி அம்­ம­னுக்கு சார்த்­தப்­படும் பட்­டுப்­பு­ட­வை­கள் சேக­ரிக்­கப்­பட்டு வாரம்­தோ­றும் வெள்­ளிக்­கி­ழமை கோயில் வளா­கத்­தில் 100 முதல் 500 புடவைகள் வரை ஏலம் விடப்­படும்.  100 ரூபா­யில் ஆரம்­பிக்­கும் ஏலம் 5ஆயி­ரம் ரூபாய் வரை கூட போகும். பக்­தர்­கள் பல­ரும் விரும்பி ஏலத்­தில் பட்­டுப்­பு­ட­வை­களை எடுப்­பது வழக்­கம்.  சுப காரி­யங்­கள், கோயில் விசே­ஷங்­க­ளுக்கு அம்­மன் புடவை என பெண்­கள் அணிந்து செல்­வார்­கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !