உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோலாகலம்

மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோலாகலம்

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

 5.௦௦ மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது.அதிகாலையிலிருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். முதல்வர் நாராயணசாமி, காலை 8.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இடைவிடாமல் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை உச்சி கால பூஜை நடந்தது. இரவு 7.00 மணிக்கு உற்சவர், வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். விழாவையொட்டி கோவிலில் அர்ச்சனை ரத்து செய்யப்பட்டு, சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் பரசுராமன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆனந்தரங்க ரவிச்சந்தர், கோவில் நிர்வாக அதிகாரி வேங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !