வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் பங்குனி திருவிழா ஏப்.5 ல் துவக்கம்
ADDED :4905 days ago
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா ஏப்., 5 ல், துவங்குகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று, திருக்கண்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்., 5 காலை 10.30 மணிக்கு, சுவாமி பல்லக்கில் புறப்பட்டு அன்றிரவு முள்ளிப்பாடியில் தங்குகிறார். மறுநாள் (ஏப்.6) காலையில் முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரம் அளிப்பார். அன்று மாலை துவங்கி ஏப்., 11 வரை திண்டுக்கல் நகரின் பல பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்., 12 ம், தேதி வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். கோயில் செயல்அலுவலர் வேலுச்சாமி, விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.