கிடாரிப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2373 days ago
மேலுார்: மேலுார் அருகே கிடாரிப்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு மூன்று நாட்கள் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று 11ம் தேதி சிவாச்சார்யார்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.