திருப்பதி விமான வெங்கடேசர் தரிசனம்
ADDED :2305 days ago
பக்தர்கள் வெங்கடேசப் பெருமாளுக்காக சனிவார விரதமிருந்து திருப்பதி வருகின்றனர். ஆனால், அவர்கள் கருவறையில் பெருமாளின் முன்னிலையில் நிற்பதோ, கண் மூடித் திறக்கும் சில நொடிதான். இதனால் விமான வெங்கடேசரை தரிசித்து திருப்தி அடைகின்றனர். ஆனந்த விமானம் எனப்படும் இதில் மூன்றடுக்கு உண்டு. பொன் மயமாக விளங்கும் மேரு மலையின் ஒரு பாகமே, ஆனந்த விமானமாக உள்ளது. பன்னிரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரநரசிங்கதேவன் என்னும் மன்னனே ஆனந்தநிலையம் முழுவதும் பொன் வேய்ந்தான்.