உந்தி பூத்த பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை
ADDED :2365 days ago
திருவாடானை : தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சர்வ ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூ தேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.