கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :2235 days ago
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர், பாடலீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மாலை 4:00 மணிக்கு, நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.